Header Ads



சுமந்திரனின் நாகரீக அரசியலை, ஏனையோரும் பார்த்தொழுக வேண்டும் - யாழ் மேயரின் கைதில் சிலரின் குரூர முகம்


- Siva Ramasamy -

ஊடகங்களில் என்னதான் விமர்சனங்களை முன்வைத்தாலும் அப்படி எழுதுபவர்களையோ அல்லது அந்த ஊடகங்களுடனோ கோபிக்காத , அதனை வைத்து வஞ்சம் தீர்க்காத அரசியல்வாதிகளில் ஒருவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் MP..

‘இது எப்படி சாத்தியமண்ணே...’  என்று நானே ஒருதடவை கேட்டிருக்கிறேன்.. அதற்கு புன்முறுவலை மட்டுமே பதிலாக தந்திருக்கிறார்..

என்னதான் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் , அவற்றை ஒதுக்கி ஒருபுறம் வைத்துவிட்டு , இன்று யாழில் மேயர் மணிவண்ணனின் விடுதலைக்காக சட்டத்தரணிகளோடு சட்டத்தரணியாக அவர் நின்றிருந்தார்... 

இந்த நாகரீக அரசியலை ஏனைய பலரும் பார்த்தொழுக வேண்டும்...

குறிப்பாக அவரது கட்சியின் சாள்ஸ் நிர்மலநாதன்...

2

தமிழ் தேசியத்தின் குரூர முகம்....சாதாரண கட்சி அரசியல் அசிங்க முகம்....

யாழ் மேயர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டதில், அடித்து பிடித்துக்கொண்டு இராஜபக்சக்களை திட்டித்தீர்க்கும் முன், இதில் சம்பந்தப்பட்டுள்ள தமிழ் தேசியத்தின் குரூர, அசிங்க முகங்களை தேடிப்  பிடிக்க வேண்டியிருக்கிறது...

தனிநாடு கேட்ட "தமிழ்த் தேசியம்" இன்று தமிழ் பிராந்தியம், மாகாணம், மாவட்டம் கடந்து இப்போது ஒரு தமிழ் மாநகர சுயாட்சியை  அனுவிக்ககூட தகுதியற்றதாக இருக்கிறது. 

மணிவண்ணன் கைதில் இரகசிய குரூர திருப்தி அடைபவர்களே, அவரை போட்டும் கொடுத்து விட்டவர்கள்... அதுதான் உண்மை...

இந்த இலட்சணத்தில்  போராட்டம், விடுதலை, தனிநாடு, சமஷ்டி.... இதெல்லாம் ஒரு கேடா என்று கேட்கத் தோன்றுகிறது.

மணிவண்ணனின் திட்டம், சீருடை நிறம் என்பனவெல்லாம் பற்றி பின்னர் பேசலாம். ஆனால் நேற்று நாடாளுமன்றத்தில் சார்ள்ஸ் நிர்மலநாதனின் உரையில் இவர்களின் ஆதங்கம் , இவர்களின் இன்னொரு முகம் அப்பட்டமாக தெரிந்தது...

சரி. யாழ்ப்பாணத்தின் மேயர் கைது செய்யப்பட்டுள்ளார். அதை கண்டித்து இன்று நாடாளுமன்றத்தில் எவரும் குரல் எழுப்புவார்களா ? 

அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் , பொறாமைகள், காட்டிக்கொடுப்புகள்  இருக்கும்வரை இதுதான் நிலைமை...

கொழும்பு மாநகர சபையும் இதே நிறத்தையொத்த சீருடையுடன் பணியாளர்களை அமர்த்தியுள்ளது. அதனால் கொழும்பு மேயரை கைது செய்வார்களா? இல்லையேல் கைது செய்யத்தான் கோருவார்களா...

நன்றாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள்... தமிழனுக்கு எதிரி வெளியில் இல்லை....

தமிழ்த் தேசியத்தின்பால் பொங்கும் புலித்தோல் போர்த்திய கழுதைகளுக்கு இது சமர்ப்பணம்...

1 comment:

  1. சார்ள்ஸ் நிர்மலநாதன் ஒரு கொடூர நயவஞ்சக மிருகம். அவனுடைய முகபாவனையில் அதை அறியலாம்.

    ReplyDelete

Powered by Blogger.