Header Ads



தெலுங்கானா அரசின் ரமலான் அன்பளிப்பும், தமிழக அரசின் ஓரவஞ்சனையும்..!!


தீபாவளி, பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்கி போனஸையும் கொடுக்கிறது தமிழக அரசு,

ஆனால் இஸ்லாமியர்களின் பண்டிகை மற்றும் கிறித்தவர்களின் பண்டிகையின் போது வெறும் வாழ்த்துக்களோடு நிறுத்திக்கொண்டு ஓரவஞ்சனை செய்கிறது.

ஒரு தாய் தம்முடைய வயிற்றில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் எப்படி சமமாக பார்ப்பாளோ அதேப்போன்று அரசு அனைத்து மத மக்களையும் சமமாக பார்க்க வேண்டும்,

ஆனால் அதில் தமிழக அரசு தவறு இழைத்தே வருகிறது.

ஆசியா கண்டத்தின் அக்னி பிரவேஷம் என்று அழைக்கப்படும் அசத்துத்தின் உவைஸி தலைமையிலான மஜ்லீஸ் கட்சியின் கோட்டையான தெலுங்கானா மாநிலத்தில் சந்திர சேகர ராவ் தலைமையிலான அரசு முஸ்லிம்களுக்கு ரம்ஜான் அன்பளிப்பு வழங்கி இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு,

பெண் விமான ஓட்டுநாராக உள்ள முஸ்லிம் மாணவிக்கு 20 லட்சம் ரூபாய் அரசு செலவில் கல்வி,

இப்படி பல்வேறு விதமான அரசின் சலுகைகள் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு செய்து வருகிறது.

No comments

Powered by Blogger.