Header Ads



நள்ளிரவில் ஒரேயொரு பதிவு போட்ட ராஹுல தேரர் - உதவிபுரிய ஓடிச்சென்ற முஸ்லிம்கள்


நேற்று -08- நள்ளிரவு பொகவன்தலாவ ராஹுல ஹிமி பயணித்த வாகனம் அம்பாரை சம்மான்துறை வீதியில் சிறியதொரு விபத்துங்குள்ளாகியுள்ளது.

அதனை அடுத்து ராஹுல ஹிமி,  அவர்களுடைய முகநூலில் ஒரே ஒரு பதிவுதான் பதிவேற்றி இருந்தார் அந்த விபத்து சம்பந்தமாக. 

அந்தப் பதிவைப் பார்த்த அந்தப் பகுதியை அன்மித்த பகுதியில் உள்ள சகோதரர்கள் உதவுவதற்காக விரைந்ததைப் பார்த்து மிகவும் ஆனந்தமடைந்தேன்.

உண்மையிலயே முஸ்லிம்களுக்கு ராஹுல ஹிமி என்றால், அலாதி பிரியம் அதற்கு காரணம் அவர் உண்மையான பௌத்தத் துறவி மட்டுமல்லாமல், மனிதநேயம் உள்ள ஒரு கருணை உள்ளம் கொண்டவரும் கூட.

மதங்களுக்கிடையில் ஒரு உறவுப் பாலம் அமைப்பதற்கு மிகவும் பாடுபடுபவர் இவரைப்போன்று அனைத்து மதத் தலைவர்களும் இருந்தால் நமக்குள் என்ன வேற்றுமை என்ன பிரிவினை.

நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் கரம் கோர்த்து ஒன்றாக பயணிப்போம் வாருங்கள் என்ற ஒரு தகவலை முன் வைக்கும் பொகவந்தலாவ ராஹுல ஹிமிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இவன்

அப்துல் ஸமட் லாமா

09.04.2021 Beruwala

1 comment:

Powered by Blogger.