Header Ads



சட்டத்தை மீறுவோர் மீது தராதரம் பாராமல் நடவடிக்கை - நாமல்


மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என பொலன்னறுவையில் இன்று -08- நடைபெற்ற நிகழ்வொன்றில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சதொச ஊடாக மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுவதாக நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

தேங்காய் எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் மூலம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால், அதனைத் தடுக்க அரசாங்கம் தலையிடும் என அவர் கூறினார்.

சட்டத்தை மீறுவோர் மீது தராதரம் பாராமல் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.