Header Ads



MF றிபானாவின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது - சாம்பலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு


 - Anzir - 


கொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 23.08.2020 வபாத்தான எம்.எப். றிபானாவின் ஜனாஸா, சற்றுமுன் கொடிக்காவத்தையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.


இதனை அவரது உறுவினர்கள் Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினர்.


ஜனாஸா தொழுகை நடாத்த, சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலில், குடும்பத்தினர் சிலர் இறுதி நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


றிபானாவின் கணவரும் ஜனாஸா தொழுகையில் பங்கேற்றுள்ளார். 


அதேவேளை எம்.எப். றிபானாவின் உடல் தகனம் செய்யப்பட்டதை அடுத்து, அவரது சாம்பலை முஸ்லிம் மையவாடி ஒன்றில், நல்லடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

6 comments:

  1. This government is accumulating God's curses.

    ReplyDelete
  2. யாஅல்லாஹ் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலைமையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவாயாக. உன்னைத் தவிர எங்கள் கவலையைத் தெரிவிக்க யாருமில்லை ரப்பே, எங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பாயாக, இந்த காலம் சென்ற தாயின் பாவத்தை மன்னித்து அன்னாரை மேலான சுவனபதியில் சேர்த்துவைப்பாயாக.

    ReplyDelete
  3. மந்திரத்தை மந்திரத்தால்த்தான் வெல்ல முடியும். சூதினை சூதினால்த்தான் வெல்ல முடியும். சதியினை சதியினால்த்தான் வெல்ல முடியும். இவைதான் தர்மம். அநியாயம் நடக்கும்போது அதனைப் பார்த்துக் கொண்டிருப்பவனும் சக்தியிருந்தும் அதனை தடுக்க முயற்சிக்காதவனும் அநியாயக்காரர்கள்தான். இவற்றை எல்லாம் திறம்பட அறிந்தவன் அல்லாஹ். இவற்றை எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான். சூதாடிகளில் பெரும் சூதாடி அவனே.
    Magic can only be overcome by magic. Gambling can only be won by gambling. Conspiracy can only be defeated by conspiracy. These are the virtues. Those who watch injustice when it happens, and do not try to stop it even by force are unjust. Allah knows all these effectively. He will take care of all these. He is the greatest gambler among gamblers.

    ReplyDelete
  4. அனைத்து இனங்களும் மதங்களும் சமமாக கருதப்படும் !நமது பிரதமர் கூறியிருக்கிறார் ?ஓகே ஓகே அது இதுதானோ

    ReplyDelete
  5. ஒரே நாடு ஒரே சட்டம் game over

    ReplyDelete
  6. (அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.
    (அல்குர்ஆன் : 10:54)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.