Header Ads



நாளை திங்கட்கிழமை தேசியப்பட்டியல், குறித்து இறுதித் தீர்மானம்


- Anzir -


ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் குறித்து, நாளை திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தியின் உயர் வட்டாரங்கள் இதனை Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தின.


ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியானது 7 பேரை, தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக தெரிவு செய்திருக்கிறது.


எனினும் ஹக்கீம், றிசாத், மனோ தரப்புக்கள் தமக்கும் தலா ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினர் வழங்கப்பட வேண்டுமென அடம்பிடித்து வருகின்றன.


இதுபற்றி நடந்த பேச்சுக்களும் முறிவடைந்த நிலையில், நாளை திங்கட்கிழமை காலை இதுபற்றிய மற்றுமொரு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.


இதன்போதே ஐக்கிய மக்கள் சக்தியின், தேசியப்பட்டியல் உறுப்பினர் குறித்து இறுதித் தீர்மானம், மேற்கொள்ளப்படுமென அறிய வருகிறது.

அத்துடன் நாளையே ஐக்கிய தேசியக் கட்சியும் தமக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் குறித்தும் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள உள்ளது.

No comments

Powered by Blogger.