Header Ads



மீண்டும் அரசியலுக்கு வரமாட்டேன், சுதந்திரக் கட்சியின் புதிய தலைவரை ஆதரிப்பேன் - சந்திரிகா


மீண்டும் அரசியலுக்கு திரும்பப்போவதில்லை எனவும், எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவர் ஒருவரை ஆதரிப்பேன் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறப்பு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஒருங்கிணைத்து ஒரு புதிய தலைவருடன் கட்சியை முன்னோக்கி அழைத்துச் செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள முடிவை தான் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ராஜபக்ஷர்கள் பின்பற்றும் அரசியலை ஒருபோதும் ஆதரிக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ஒரு நல்ல தலைவர் இல்லாத காரணத்தினால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வியை சந்திக்க நேர்ந்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.