Header Ads



பாராளுமன்றத்தில் இன்று, நடைபெற உள்ளவை



இன்று (21) காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளது. 

இதன்போது ஜனாதிபதியினால் நேற்று (20) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல் அடுத்த வருடத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றப்படும்வரையான காலப் பகுதிக்காக அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் இடைக்கால கணக்கு வாக்கெடுப்புப் பற்றி நிலையியற்கட்டளை இலக்கம் 27ற்கு அமைய ஒழுங்குப் புத்தகத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

அதேநேரம், எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 6.30 மணிவரை பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கும், அத்தினங்களில் மதிய போசன இடைவேளையின்றி அமர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் விசேட கருத்தை முன்வைக்கவுள்ளார்.

No comments

Powered by Blogger.