Header Ads



19 ஐ இல்லாதொழிப்பதற்கு எதிராக, சத்தியாக்கிரகப் போராட்டம்


அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஆரம்பிக்கவுள்ளது.


செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி இந்தப் போராட்டம், நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள வண மாதுளுவாவே சோபித தேரரின் நினைவு இடத்தில் ஆரம்பிக்கப்படும் என இதன் பிரதம செயலாளர் பாலித்த லிஹினிய குமார தெரிவித்தார்.


அதேவேளையில் 19 ஆவது திருத்தத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் குறித்த கலந்தாலோசனைகளை செப்டம்பர் 10 ஆம் திகதி ஆரம்பிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 19 ஆவது திருத்தம் அனைத்துத் தரப்பினரது ஆதரவுடனுமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.