Header Ads



அம்பாறையிலும், திருகோணமலையிலும் நில அபகரிப்புக்கு உட்பட்டுள்ளோம் - அப்துல்லா மஃறூப்

தேர்தல் காலத்தில், சிறுபான்மையின மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என, திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினரும், முன்னாள்   பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான  அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் அவரது அலுவலகத்தில் இன்று (17)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில், “நாம் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். 2000ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிற்பாடு, திருகோணமலை மாவட்டத்திலுள்ள மக்கள் மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்து மக்களும்  சமூக உரிமைக்காக குரலாக ஒலிக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பமாக தற்போதைய தேர்தல் காணப்படுகின்றது.

“தொல்பொருளைப் பாதுகாக்க ஜனாதிபதி செயலணியை உருவாக்கியதன் மூலம், தேர்தல் காலத்தில் சிறுபான்மை மக்களைப் புறக்கணித்து, இவர்கள் செயற்படுகின்றார்கள்.

“கிழக்கில் அம்பாறையிலும் திருகோணமலையிலும் நில அபகரிப்புக்கு உட்டுள்ளோம். வடபுலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் நடந்தேறியுள்ளன. இந்நிலையில், தேர்தல் காலத்தில் இவ்வாறானதொரு செயலணி அவசியமா?” எனக் கேள்வியெழுப்பிய அவர், “அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஒன்றுக்கொன்று முரணாகக் காணப்படுகின்றன” என்றார். 

1 comment:

  1. நிலத்துக்காக முஸ்லிம்கள் போராடவேண்டும். போரில் அரசு பக்கம் நின்று அதிக வாய்ப்புகளை உருவாக்கிய போர்காலத்தில் நிலத்தை மீட்பதற்க்கு பதிலாக தெருக்களில் வளைவுகடுவதற்க்கு முக்கியத்துவம் கொடுத்ததுபற்றி யாரும் விமர்சிக்கவில்லை. முஸ்லிம்கள் இனியாவது தமிழர்போல நிலத்தை முன்னிறுத்தி தங்களது அரசியல் மூல உபாயங்களையும் தந்திரங்களையும் உருவாக்க வேண்டும். முதல் கட்டமாக லகுகல பிரதேசத்துடன் இணைகப்பட்டுள்ள தென் மேற்க்கு அம்பாறை மாவட்ட காடுகளை பொத்துவில் பிரதேசத்துடன் கீழ இணைக்கிற அரசியல் போராட்டத்தில் முஸ்லிம்களும் தமிழர்களும் கைகோர்க்க வேணும்.

    ReplyDelete

Powered by Blogger.