Header Ads



சிறுவர்களை பௌத்த துறவிகளாக மாற்றுவதற்கு மங்களசமரவீர எதிர்ப்பு - முகநூலில் கருத்து


இளம் பௌத்த துறவிகளாக சிறுவர்களை மாற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் சடங்குகளை முன்னாள் நிதியமைச்சர் மங்களசமரவீர கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமூக ஊடகபதிவொன்றில் மங்களசமரவீர தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

சிறுவர்களை பௌத்த துறவிகளாக மாற்றும் நடவடிக்கையை விடுதலைப்புலிகள் சிறுவர்போராளிகளை பயன்படுத்துவதுடனும், தலிபானின் சிறுவர் திருமணங்களுடனும் மங்களசமரவீர ஒப்பிட்டுள்ளார்.

ஆண் பெண் குழந்தைகள் இளம் பிக்குகளாக மாற்றப்படுவது அதிர்ச்சியளிக்கின்ற விடயம் என குறிப்பிட்டுள்ள மங்களசமரவீர இது விடுதலைப்புலிகளின் சிறுவர்போராளிகள் ,தலிபானின் சிறுவர் திருமணங்களை போன்ற ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்துள்ளார்.இது சிறுவர் உரிமை மோசமாக மீறப்படும் செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த படமொன்றையும் அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.
பௌத்த மதம் மற்றும் பௌத்த மத தலைவர்களிற்கு எதிராக மங்களசமரவீர கருத்துக்களை வெளியிட்டுவருவதும் அதற்காக கடும் எதிர்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Mr Mangala well said the his opinion.

    ReplyDelete
  2. It's certainly violation of children's rights. Hats off Mangala for being forthright and honest.

    ReplyDelete

Powered by Blogger.