Header Ads



மக்களுக்காகக் குரலெழுப்பிய ஓர் உண்மையான தொழிற்சங்கவாதி படுகொலை - மிகமோசமான ஈவிரக்கமற்ற சம்பவம்

(நா.தனுஜா)

தனது மக்களுக்காகக் குரலெழுப்பிய ஓர் உண்மையான தொழிற்சங்கவாதி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் கண்டத்திற்குரியது எனத் தெரிவித்திருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, நாட்டில் இடம்பெறும் இத்தகைய ஈவிரக்கமற்ற செயற்பாடுகளுக்கு எதிராக மக்களனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

வாகன குத்தகை வழங்கல் மாஃபியா தொடர்பில் வெளிப்படுத்திய தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கடந்த செவ்வாய்கிழமை வாகனங்களைக் குத்தகைக்கு வழங்கும் நிதிநிறுவனம் ஒன்றின் முன்னாள் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்குக் கண்டனம் வெளியிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் கரு ஜயசூரிய மேலும் கூறியிருப்பதாவது:

சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த கண்டனத்திற்குரியதாகும். அவர் தன்னுடைய மக்களின் பக்கம் தொடர்ந்தும் நின்ற உண்மையான ஓர் தொழிற்சங்கவாதி ஆவார். அவர் உதவி தேவைப்பட்ட மற்றுமொரு முச்சக்கரவண்டி சாரதிக்காக உதவ முற்பட்டதுடன், அரசாங்கம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ள உரிய தள்ளுபடிகளை அல்லது சலுகைகளை வழங்குமாறே கோரினார். இவருடைய படுகொலை போன்ற மிகமோசமான ஈவிரக்கமற்ற சம்பவங்களுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

No comments

Powered by Blogger.