மாளிக்காவத்த பள்ளிவாசல்களில் சிறந்த, சுகாதார ஏற்பாடுகள் (படங்கள்)
கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு எங்கள் மஸ்ஜித் திறக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
ஒரே சமயத்தில் 50 பேர் மட்டும் தொழமுடியும் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு மஸ்ஜிதுக்கு வருபவர்களின் ஆரோக்கியத்தை கருதி உடல் வெப்பநிலை சோதிக்கப்படுகிறது.
கையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் வசதியும் பள்ளிவாசலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் முககவசம் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளிவாசலில் வுழு செய்ய இன்னும் அனுமதி தரப்படாததால் பள்ளிக்கு வருபவர்கள் தங்கள் வீடுகளிலேயே வுழு செய்து கொண்டு வர வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களில் முக்கியமாக சமூக தொலைவு மற்றும் பள்ளியில் தூய்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவரவர் முஸல்லாவையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Maligawatte Jumma Masjid
Post a Comment