Header Ads



கொட்டக்கலையில் கடைக்குள் புகுந்து 68 இலட்சம் பணமும், 25 லட்சம் பெறுமதியான ஆடைகளும் கொள்ளை

எம்.கிருஸ்ணா

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகரில் ஆடைடையகத்தில் பணம் மற்றும் துணிவகைகளை இனந்தெரியாதோரால் திருடிச்செல்லப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று -12- அதிகாலை நான்கு மணியளவில் ஆடை விற்பனை நிலைய உரிமையாளர் கொழும்பு செல்வதற்காக ஆடையகத்தை திறந்து பணம் எடுக்க சென்றபோதே அங்கிருந்து பணமும் ஆடைத்துணிகளும் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது .

வழமை போல வியாபாரத்தை முடித்துக்கொண்டு ஆடையகத்தை உரிமையாளர் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்ற பின்னர் நேற்று இரவு இனந்தெரியாதோரால் குறித்த ஆடையகத்தின் முன் கதவு பூட்டினை திறந்து லாவகமாக உள்ளே சென்று 68 லட்சம் ரூபாய் பணமும் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான ஆடைத்துணிகள் களவாடிவிட்டு ஆடையகத்தின் கதவினை பூட்டு விட்டு சென்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடையகத்திலுள்ள சீ.சீ டிவி கமரா கடந்த சில காலமாக செயலிழந்து காணப்படுவதாக உரிமையாளர் தெரிவித்துள்ளதுடன் ஆடையகம் உடைப்பு சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

1 comment:

  1. Ketu parunga... Kandipa insurance panirupapla.. 68 latcham 🤔

    ReplyDelete

Powered by Blogger.