4 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்தது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 82 லட்சத்து 27 ஆயிரத்து 744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில்
35 லட்சத்து 3 ஆயிரத்து 529 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பரவியவர்களில் 42 லட்சத்து 79 ஆயிரத்து 778 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை
4 லட்சத்து 44 ஆயிரத்து 437 பேர் உயிரிழந்துள்ளனர்.
Post a Comment