கட்டாரில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அறிவுறுத்தல்
கட்டாரில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்த வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த கட்டாரிலிருந்து பயணிக்கும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் ரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான ஆலோசனைகளின் பேரில், இடைக்கால நடவடிக்கையாக அங்கு சிக்கித் தவிப்பவர்களுக்கு தங்குமிட வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்குமாறு கட்டாரிலுள்ள இலங்கையின் பதில் தூதுவருக்கு நான் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.
Post a Comment