Header Ads



ஐக்கிய தேசியக் கட்சியினர், அரசாங்கத்துடன் இணைய முயற்சி - லக்ஷ்மன் கிரியெல்ல

ஐக்கிய தேசியக் கட்சியினர், அரசாங்கத்துடன் இணைய முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்துடன் இணைய முயற்சிப்பது குறித்து தகவல் கிடைத்திருப்பதாகவும் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் கூறியுள்ளார்.

அழைப்பு விடுத்தால் அரசாங்கத்துடன் இணைய தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

எனினும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்துடன் இணையாது. அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி தனது சொந்த அரசாங்கத்தை அமைக்கும்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் தோல்வியை சந்திக்கும் எனவும் கிரியெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.