Header Ads



முஸ்லிம் பெற்றோர்களே, வரலாற்றுத் தவறைச் செய்யாதீர்கள்...

6 வருடங்களுக்கு முன் கொழும்பில் உள்ள பிரபல்யமான ஒர் முஸ்லிம் மகளிா் கல்லுாாியில் உயர்தரம் சித்தியடைந்த மாணவிகளை கௌரவிப்பதற்காக கல்லுாாியில் அதிபா் ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தாா். 

அவ்வைபவவத்திற்கு தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தா் பிரதம அதிதியாக வரவலைக்கப்பட்டிருந்தாா். அதிபா் என்னையும் ஊடக ஆவரனைக்காக அழைத்திருந்தாா்., 

அந்த கல்லுாாியின் பெண் அதிபா் காலத்தில் அவரது பாடசாலையின் அந்த ஆண்டு 21 மாணவிகள் உயா் தரம் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்வதற்கு தெரிபு செய்யப்பட்டிருந்தனா். 

21 மாணவிகளது புகைப்படங்களும் அவர்களது பெயா்கள் பெறுபேறுகள் அடங்கிய பெரிய பதாதை பெனா் ஒன்றும் கல்லுாாியின் முன் வாசலில் தொங்கவிடப்பட்டிருந்தது. 

ஆனால் அந்த வைபவத்திற்கு 10 முஸ்லிம் மாணவிகளும் அவா்களது பெற்றோா்கள் மட்டுமே சமுகம் தந்திருந்தனா். 

ஏனயை 11 பேரில் 5 மாணவிகள் பரிட்சை முடிபு வருவதற்குள் பெற்றோா்கள் திருமணம் முடித்து வைத்துவிட்டாா்கள் .ஏனைய 6 பேரும் திருமணம் முடித்துக் கொடுப்பதற்காக பெற்றோா் தீர்மாணித்துவிட்டாா்கள். 

அதிபா் அந்தப் பெற்றோா்களுக்கு தொலைபேசி மூலம் அறிவுரை வழங்கியும், அந்தப் பெற்றோா்கள் கூறியதவாது - 

எனது மகள் உயா்தரம் மட்டும் படித்தால் போதும் எனது மகளுக்கு 3 பாசையும் பேச எழுத தெரியும். இவங்கள யாழ்பாணத்திற்கும், மட்டக்களப்புக்கும் ஒழுவில் கெம்பஸ்களுக்குக் கூட்டிக் கொண்டு பஸ்கள் அலைந்து திரிய நாங்கள் தயாா் இல்லை. எனது மகளுக்கு திருமணம் முடித்துக் கொடுத்தால் எங்களது கடமை முடிந்துவிடும். எனது மகளை திருமணம் முடிக்கும் மாப்பிள்ளை வீடு, வாகனம் சோறு, உடுப்பு வைத்தியம் பணம் தேவையானதெல்லாம் அவர் கொடுப்பாா். எனது மகள் கெம்பஸ்க்குப் போய் பட்டம் பெற்று அரசாங்கத் தொழில் தேடி வேலையற்ற பட்டதாரி என்று ஆர்ப்பாட்டம் பண்னி உண்னாவிரதம் இருந்து அதற்குப்பின் ஓர் அரச தெழில் பெற்று உழைத்துத்தான் எங்களுக்குத் தரனும் என எங்களுக்கு விருமப்பமில்லை. என்று சில பெற்றோா்கள் பதில் அளித்தாா்களாம். 

இதனை அங்கு நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்விடயத்தை அந்த அதிபாின் உரையின்போதே இதனைத் தெரிவித்தாா். 

அந்த அதிபாின் மகள் ஆங்கில மொழி மூலம் கற்று வைத்தியா்துறைக்கு 5 புள்ளிகள் குறைந்ததால் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு எனது மகளுக்கு இலவசமாக கற்கச் சா்ந்தா்ப்பம் கிடைக்கவில்லை பாக்கிஸ்தானில் பிரபல்ய பல்கலைக்கழகத்தில் இலட்சக்கணக்கான பணம் செலுத்தி வைத்தியதுறைக்கு அனுப்பி பயில்வதாகவும் அதிபா் அங்கு தெரிவித்தாா். 

ஆனால் சில முஸ்லிம் பெற்றோா் கொழும்பில் உள்ள தனியாா் வைத்தியசாலைக்கு தனது மகள் தாய்மையடைந்தால் அழைத்துக் கொண்டு . பெண் வி.ஓ.ஜி மகப் பேற்று நிபுணா் இல்லியா? என அங்கு விசாரிப்பாா்கள். அந்த நேரத்தில் தாய்மையடைந்த அந்த மகள் ஏன் வாப்பா என்னை ஒரு மகப்பேற்று வைத்தியராக நீங்கள் படிக்க விடாமல் கல்யாணம்முடித்து தந்தீா்கள் ? எனது பல்கலைக்கழக விண்ணப்பத்தினை அன்று கிழித்து எறிந்தீா்கள் என கேட்டதையும் நான் அவதானித்துள்ளேன்.

ashraff a samad


4 comments:

  1. Bothe sides have acceptable reasonings

    We need muslim VOGs and also sending matusred girls far away alone for education ? Even Muhammed(sal) stoped a companion going to jihaad and aske him to accompany his wife to umra ( not allowd her to go to umra alone but in a group)

    We have to consider both sides...

    Rather we should find ways to overcome both problems...

    ReplyDelete
  2. True, our parents should think broadly. but?

    ReplyDelete
  3. The responsible and capable people in our society must make the necessary arrangements for the girls to continue their studies safely and with no delays or hindrances.

    ReplyDelete
  4. Our society need more women VOGs, its true. But rather than making VOGs, we need to protect our precious daughters and sisters

    ReplyDelete

Powered by Blogger.