Header Ads



இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20,000 ரூபாவை வழங்குமாறு சட்டநிபுணர் கோரிக்கை

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட அன்றாடம் வருமானத்திற்காக தொழில் செய்யும் நபர்களுக்கு 5000 அல்ல, 20000 ரூபா வரை வழங்க அரசாங்கத்தினால் முடியும் என சட்டநிபுணராகிய லால் விஜேநாயக்க தெரிவித்திருக்கின்றார்.

கண்டியில் இன்று காலை இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பேசியபோது அவர் இதனை கூறினார்.

தற்போது உலக அளவில் எரிபொருள் விலை முற்றாகவே குறைந்துள்ளது. அமெரிக்காவில் எரிபொருள் வாங்குபவர்களுக்கு பணம் அறவிடாமல் அவர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்கும் அளவுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இலங்கையிலும் எரிபொருள் இறக்குமதியினால் மிகுதியாகும் பணத்தைக் கொண்டு 20000 ரூபா வரை பாதிக்கபப்ட்ட மக்களுக்கு உதவித் தொகை வழங்கமுடியும் எனவும் சட்டநிபுணர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.