மைத்திரியை துரத்த முயற்சி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் விரைவில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே இதனை தெரிவித்துள்ளார். அநுராதரபுரத்தில் வைத்து அவர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெறும்வரை மைத்திரிபாலவை நெருக்கமாக வைத்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தற்போது அவரை துரத்த முயற்சிக்கிறது என்றும் கமகே குறிப்பிட்டார்
முடிவில் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக்கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்
MOOSALAY SORY SENA.
ReplyDeleteමූසලයා.
මූසලයා.
මූසලයා
ALSO RANIL මූසලයා