நல்லாட்சி அரசுசெய்த, ஒரே அரசியல் மாற்றம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை அழித்தது மாத்திரதே நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் மேற்கொண்ட ஒரே அரசியல் மாற்றம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹங்வெல்ல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதுள்ள சமூகத்தில் இருக்கும் மக்கள் கட்சி, வர்ண பேதம் பார்த்து அணிகளாக பிரிவதில்லை. இதன் காரணமாகவே அரசியல்வாதியாக இல்லாத கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்துள்ளார்.
நாட்டை நேசிக்கும் தலைவரை எதிர்பார்த்த மக்கள் அவரை வெற்றி பெற செய்தனர் எனவும் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
This fellow is a Big racist in Sri lanka.
ReplyDelete