Header Ads



திட்டமிட்டவாறு தேர்தல் நடைபெறும் - சார்க் நாடுகள் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி!

ஏப்ரல் மாதம் பாராளுமன்ற பொதுத் தேர்தலானது திட்டமிட்டபடி நடைபெறும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்றைய தினம் -15- தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று குறித்து ஆலோசிப்பதற்காக சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை காணொளி மூலமாக இடம்பெறவுள்ளது.

இதன்போதே ஜனாதிபதி இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின்போது கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

இந்த காணொளி கலந்துரையாடலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ், நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, பாகிஸ்தான் பிரதமருக்கான சிறப்பு உதவியாளர் ஜாபர் மிர்ஸா ஆகியோர் இணைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.