Header Ads



ரவியை கைதுசெய்ய, பொது மக்களும் உதவலாம் - தொலைபேசி இலக்கம் அறிவிப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 9 பேரை கைதுசெய்யுமாறு நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பில் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும், நீதிமன்ற பிடியாணை அனுப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

ரவி கருணாநாயக்க,  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட  10 சந்தேக நபர்களை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 96 மணி நேரமும் கடந்துள்ளது.

இந் நிலையில் அவர்களில் ஒருவரைத் தவிர ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்ய சி.ஐ.டி.யால் முடியாமல் போயுள்ளது. 

இந் நிலையில் ரவி உள்ளிட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக நியமிக்கப்பட்ட சி.ஐ.டி.யின்  குழுக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக சி.ஐ.டி.யில் மட்டும் 15 குழுக்கள்  களத்தில் இறக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் இருக்குமிடம் அல்லது அவர்கள் குறித்த ஏதேனும் தகவல் அறிந்தவர்கள், 0112320141, 0112320142, 0112320143 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக சி.ஐ.டி.யை தெளிவுபடுத்த முடியும் என சி.ஐ.டி. அறிவித்துள்ளது.

3 comments:

  1. இவர்கள் பற்றிய செய்தி ஒழித்துவைத்திருப்பவர்களுக்கு மாத்திரம் தான் நன்றாகத் தெரியும். தெரிந்தவர்கள் ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். இனி தொலைபேசி இலக்கங்கள் ஏன்?

    ReplyDelete
  2. May be, the officers who has gone inside Ravi's house in search of him know the fact whether he is inside the house or not. Why media has not questioned the officers who come out from Ravi's house, what happened inside the house??

    When somebody goes to some office to hand over some complain, the media always behind him, asking questions and taking voice cuts. But in this case, media shows only some people, coming out of Ravi's house and walking in the street. No talking at all.

    ReplyDelete
  3. Toay's most media are the main culprits they rule the country due to weakness of citizens who blindly believe in what these media lie....

    ReplyDelete

Powered by Blogger.