இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் 5 பேராக உயர்வு
மேலும் 3 இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பதிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
அவர்களில் இருவர் ஐ.டி.எச். வைத்தியசாலையிலும், ஒருவர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மூன்று பேரில் இருவர் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் 37 மற்றும் 43 வயதுடைய வர்கள் என்றும் கண்டக்காடு வைத்திய முகாமில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை மூன்றாவது ஜெர்மனியில் இருந்து வந்த 41 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்படி தற்போது 5 பேர் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment