ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புதிய அலுவலகம் நேற்று பத்தரமுல்லையிலுள்ள நெலும் மாவத்தையில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டபோது... அருகில் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவையும் காணலாம்3j
"நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத மாபெரும் வெற்றிபெற்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணி கூட்டணியின் பிரதான இலக்காகும்."
ReplyDelete'தாமரை மொட்டு' சின்னத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்போம். சின்னம் தொடர்பில் இறுதி முடிவு எடுத்துவிட்டோம். எனவே, எக்காரணம் கொண்டும் சின்னத்தை மாற்றவே மாட்டோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை நிறுவ ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டோம். ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் எமது கட்சிக்குத் கிடைத்த அமோக வெற்றியினால் ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணியை சுலபமாக நிறுவியுள்ளோம்.
எமது கூட்டணி நாட்டு மக்களின் பேராதரவுடன் வரலாறு காணாத மாபெரும் வெற்றியை நாடாளுமன்றத் தேர்தலில் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது" - என்று முன் கூறியுள்றார்.
Noor Nizam - Convener "The Muslim Voice".