ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்து, சிகிச்சைபெற்று வந்தவர் நேற்று உயிரிழப்பு
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி உயிரிழந்தார்.
கடந்த 09 மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 26 வயதான நிரின் ப்ளோரிடா என்ற யுவதியே உயிரிழந்தவராவார்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இவர் படுகாயமடைந்திருந்தார்.
குறித்த யுவதி 09 மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த போதிலும் நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரின் ஆத்ம சந்திக்கும் குடும்பத்தாரின் துயர் நீக்குவதட்கும் பிரார்த்திப்போமாக ஆமென் !
ReplyDeleteThe enemy is not a Religion, Enemy is EXTREMISM. Deepest condolences to your family sister.
ReplyDelete