அஷ்ரப் ஒத்துழைப்பு வழங்கியதுபோல, ஹக்கீமும் எனக்கு ஆதரவு வழங்குவதை மதிக்கிறேன் - சஜித்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று (02) ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடினர்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச, தனது தந்தைக்கு மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒத்துழைப்பு வழங்கியதுபோல தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் தனக்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பதை பெரிதும் மதிப்பதாக தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது முஸ்லிம்களின் பாதுகாப்பு பிரச்சினைகள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிப் பிரச்சினைகள், வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைகள், அறுவைக்காடு குப்பை விவகாரம், கல்முனை விவகாரம், கொழும்பு முஸ்லிம் குடியிருப்பு பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்களுக்கு தீர்வுகாண்பது குறித்து கலந்துரையாடப்பட்டன.
தலைமை கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
ReplyDelete