Header Ads



குவைத்திலிருந்து தனது தற்கொலையை, நேரடியாக ஒளிபரப்பிய இலங்கையர்

குவைத்தில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Kheitan பகுதியிலுள்ள மாடி குடியிருப்பில் வசிக்கும் இலங்கையரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த நபர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்யும் போது அதனை கையடக்க தொலைபேசி ஊடாக தனது காதலிக்கு நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட காதலி, அங்கிருந்தவர்களின் உதவியை நாடியதுடன், தற்கொலை செய்தவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.