Header Ads



பௌசி உள்ளிட்ட 5 பேரை, கட்சியிலிருந்து நீக்க தீர்மானம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 5 பேரை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து எதிர்வரும் இரண்டு மூன்று தினங்களில் நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஏ.எச்.எம் பௌசி, லக்ஷமன் யாபா அபேவர்தன, எஸ்.பி திஸாநாயக்க, டிலான் பெரேரா மற்றும் விஜித் விஜேமுனி சொய்சா ஆகியவர்களையே இவ்வாறு நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் அவர்களுக்கு எதிர்வரும் இரண்டு மூன்று தினங்களில் அதற்கான கடிதத்தத்தை அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.