சஜித்திற்கு ஆதரவான அணியில், லக்ஷ்மன் கிரியெல்லவும் இணைந்தார்
அமைச்சர் சஜித் பிரேமதாச 20 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியுள்ளமை, அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட இருக்கும் பெரிய தகுதி என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் பெறும் பட்டத்தைவிட, நாடாளுமன்ற உறுப்பினராக பெறும் அனுபவம் மிகவும் பெறுமதியானது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் சஜித் பிரேமதாசவுக்கு லண்டன் ஸ்கூல் ஒப் எக்னோமிஸ் பல்கலைக்கழத்தின் பட்டமும் உள்ளது. இவற்றை விட அவர் 20 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பெற்ற அனுபவம் மிகவும் முக்கியமான தகுதி.
மேற்போக்காக ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது. செயற்குழுக் கூடி சிறந்த வேட்பாளரை தெரிவு செய்யும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான பேச்சு
ReplyDelete