Header Ads



முற்றுகையிட தயாராக இருந்த, சஜித்தின் ஆதரவாளர்கள்

ஐக்கிய தேசியக் கட்சி நாளைய தினம் -05-கொழும்பில் நடத்தவிருந்த தேசிய ஜனநாயக முன்னணி என்ற அரசியல் கூட்டணியை ஆரம்பிக்கும் நிகழ்வை ஒத்திவைத்துள்ளது.

கொழும்பு சுகததாச உள்ள அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. நிகழ்வுக்கு வருகை தர வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் அழைப்பு கிடைக்காத சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் நாளைய தினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கை முற்றுகையிட திட்டமிட்டிருந்ததாக பேசப்படுகிறது.

இந்த நிலைமை காரணமாகவே நிகழ்ச்சியை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அறிவிக்க கோரி நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.