Header Ads



கோத்தபாய செய்த பாவங்களுக்கு, ஒருபோதும் மன்னிப்பு கிடையாது - ராஜித

ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, அவர் பௌத்த விகாரைகள் மற்றும் இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

எத்தனை விகாரைகள், ஆலயங்கள் ஏறி இறங்கினாலும் அவர் செய்த பாவங்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடையாது.

ஏதோவொரு விதத்தில் அவருக்குத் தண்டனை கிடைத்தே தீரும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

பெரிய குற்றச்சாட்டுக்களை சுமந்து நிற்கும் கோத்தபாயவை, வெட்கம் இல்லாமல் ஜனாதிபதி வேட்பாளாராக மஹிந்த களமிறக்கியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட ராஜபக்ச குடும்பத்தில் எவருக்கும் தகுதியில்லை. அந்த முழுக்குடும்பம் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சர்வாதிகார ஆட்சியில் தான் மேற்படிக் குற்றங்களை ராஜபக்ச குடும்பம் புரிந்துள்ளது.

எனவே, கடந்த தடவை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தது போல் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும் தோல்வியடைவார் என்பது உறுதி.

வெற்றிவாகை சூடப்போகின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நீங்கள் முஸ்லீம் செய்த அநீதி அளவே இல்லை , கோத்த வருவது உறுதி ,
    நீங்கள் செய்த அட்டூழியம் போதும். வீட்டுக்கு செல்லவும்

    கோத்தபாய அரசாங்கத்தில் நாடு இனிதே முன்னேறிடும்

    ReplyDelete
  2. யோவ் ரஜித்தே நீ என்ன மினிஸ்டர்ர் ! சுகாதாரம் அதே மட்டும் பாரு . நீ எல்லத்துக்கேயும் மூக்கை நொழைக்காய்

    ReplyDelete

Powered by Blogger.