முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா..? விளக்கம்கேட்ட ஹக்கீமுக்கு கிடைத்த பதில்
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் உதய கம்மன்பில மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்திற்கு தரவு ஒன்றை கொண்டு சென்றிருந்தார். அதில் 1 - 14 வயதுடைய முஸ்லிம் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு இது குறித்து விளக்கம் கேட்டேன். அவ்வாறான அதிகரிப்பு இல்லை, இது போலியான தகவல் என தெரிவித்தனர்.
1881ஆம் முதலாவது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது காணப்பட்ட பௌத்த மக்களின் எண்ணிக்கையில் நூற்றுக்கு 10 வீதம் அதிகரித்துள்ளது. முஸ்லிம் மக்களின் எண்ணிக்கையில் எந்தவித அதிகரிப்பும் ஏற்படவில்லை தெரிவித்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டி, தெல்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே ஹக்கீம் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
Post a Comment