உயர் தரத்திலான போஷாக்கு அரிசி, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது
பாடசாலை மாணவர்களின் போஷாக்கின்மையை இல்லாது ஒழித்து, ஊக்கமுடைய சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன், உயர் தரத்திலான போஷாக்குடனான அரிசியை உற்பத்தி செய்து மாணவர்களுக்கு அவற்றை இலவசமாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலக உணவு அமைப்பும் விவசாய அமைச்சும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருப்பதாக விவசாய கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
இதன் முதற் கட்டமாக அநுராதபுர மாவட்டத்தில் பின் தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தரம் 5 இற்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் இவ்வாறான உணவை வழங்குவதற்கான உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உணவும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
மேலும், இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்வொன்று சீகிரிய சுற்றுலா கேந்திர நிலையத்தில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடதக்கது.
இத ஆருவா வழங்குறே , இதுலே கருத்தடை மாத்திரை போடு இருந்தா என் செய்றே ??
ReplyDelete