முஸ்லிம்களை இலக்குவைத்து, மீண்டும் தேடுதலா...?
சட்டவிரோதமான முறையில், வெடிபொருள்கள் உள்ளிட்ட ஆயுத, உபகரணங்களைத் தம்வசம் வைத்திருக்கும் நபர்களைத் தேடி, திங்கட்கிழமை (20) முதல், நாடு முழுவதிலும், விசேட சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
அனுமதிப் பத்திரங்களின்றி, வெடிபொருட்களைத் தம்வசம் வைத்திருப்பவர்களுக்கு, அவற்றை ஒப்படைப்பதற்கான காலஅவகாசம், கடந்த 12ஆம் திகதி முதல் வழங்கப்பட்டிருந்தது.
இந்தக் காலஅவகாசம், 20அம் திகதி அதிகாலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகத்தால், நேற்று முன்தினம் (15) அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் காலஅவகாசம் முடிவடைந்தவுடன், நாடு முழுவதிலும், விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கலவரத்தில் ஈடுபட்ட பௌத்த கடும் போக்குவாதிகளை இனங்கண்டு தேடுதல் வேட்டை நடதினால் அதிகமான வெடிபொருட்கள் எடுக்க முடியும். கலவரத்தில் இவர்கள் பயன்படுத்தி இருக்கின்னறார்கள் என நினைக்கத் தோன்றுகின்றது
ReplyDelete