Header Ads



சஹ்ரானின் மகளை பொறுப்பேற்க, யாரும் இல்லை - பொலிஸார் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த சஹ்ரானின் மகளை, எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 4 வயதான மகள் தாயுடன், குற்ற புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

எனினும் இதிலிருந்து தப்பித்த பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது உடல்நிலை தேறியுள்ள நிலையில், கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. அந்த பிள்ளையை தாயுடன் வைத்துக் கொள்வது சிறந்தது.தாயுடன் இருப்பது அந்த பில்லைக்கு கொஞ்ஞமாவது சந்தோசமாக இருக்கும்

    ReplyDelete
  2. பிள்ளைய பொறுப்பேற்க யாருமில்லை என்று சொல்றாங்க.யாராவது முன்வந்தால் அவங்க பயங்கரவாதி இல்லை என்று சொல்லி உள்ள போடாமல் இருக்கிறதுக்கு என்ன உத்தரவாதம் உங்களால் கொடுக்க முடியும்

    ReplyDelete

Powered by Blogger.