Header Ads



தீவிரவாதிகளை கைது செய்வதற்கு பெரிதும் உதவிய, முஸ்லிம் சமூகத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன் -ரணில்

பயங்கரவாத மற்றும் தீவிரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருவதாக வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்..

கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் தலைமையில் இன்று -28- இடம் பெற்ற விசேட தேவ ஆராதனையில் கலந்துகொண்ட பின்னர் பிரதமர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள ஜிகாத் வாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு புதிய சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறினார். இதுவே அரசாங்கத்தின் முக்கிய கருமமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த வருடம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத தடுப்பு நகல் பிரேரணை குறித்து வாதங்கள் நடத்தப்பவிருப்பதா குறிப்பிட்ட பிரதமர் . தீவிரவாதிகளின் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டெடுப்பதற்கும் தீவிரவாதிகளை கைது செய்வதற்கும் முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்கள் பெரிதும் உதவி செய்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார். அதற்காக முஸ்லிம் சமூகத்திற்கு அவர் நன்றிகளையும் தெரிவித்தார்.

1 comment:

  1. ஆகவே அமெரிக்காவின் பயங்கரவாத்ததை அழிக்க முஸ்லிம்கள் அவர்களால் இயன்ற அனைத்து தகவல்களையும் நம் நாட்டு பாதுகாப்பு படைக்கு கொடுக்கின்றார்கள்

    எனவே நம் நாட்டை நாசமாக்கி துண்டாடி நம் நாட்டு பொக்கிசங்களை மன்னார் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள Gas,Petrol களவு எடுக்க உதவி என்ற பெயரில் வந்துள்ள FBI அமெரிக்க கள்ளர்களை நம் நாட்டைவிட்டு தூரமாக்கிவிடுங்கள் இல்லாவிட்டால் சில அரபுநாடுகளை நாசமாக்கியுள்ளது போன்று நம் நாட்டையும் நாசமாக்கி விடுவார்கள்

    ReplyDelete

Powered by Blogger.