Header Ads



ரஞ்சன்,, விரைவில் கொல்லப்படலாம்

தனது நேர்மையான செயற்பாடுகள் காரணமாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விரைவில் கொல்லப்படலாம் என பேராசிரியர் கார்லோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அரசியலில் தவறான திசையில் போயிருந்தாலும், ஒரு மனிதன் அவரை விட நேர்மையாக இருக்க முடியாது.

அவரது நேர்மை காரணமாகவே நான் இன்று நின்றுகொண்டிருக்கின்றேன். ரஞ்சன் ராமநாயக்க மரணம் குறித்து பயப்படவில்லை, அவர் எப்போதும் நேர்மையாக பேசுவார்.

அவரை விட யாரும் நேர்மையானவராக இருக்க முடியாது என்பது எனக்குத் தெரியாது.

சமீபத்திய சம்பள உயர்வுகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர் அனைத்தையும் மறுத்தார். அவர் தனது சொந்த தொண்டு நிறுவனம் மூலம் பொது மக்களுக்கு சேவை செய்கிறார்” என பேராசிரியர் கார்லோ பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, அண்மை காலமாக நாட்டில் அதிகளவான போதைப்பொருள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில், அமைச்சரவையில் உள்ள பலரும் போதைப்பொருள் பயன்படுத்துவதாக ரஞ்சன் ராமநாயக்க பகிரங்கமாக கூறியிருந்தார்.

இந்த விடயம் தற்போது கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பேராசிரியர் கார்லோ பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.