ஐ.நா. படை மீது தாக்குதல், இலங்கை இராணுவத்தினர் 2 பேர் பலி - மாலியில் துயரம்
ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக, மாலி இராச்சியத்துக்குச் சென்றுள்ள இலங்கைப் பாதுகாப்புப் படையினர் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், இராணுவத்தில் கெப்டன் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவரும் மற்றுமொரு வீரரும் உயிரிழந்துள்ள அதேவேளை, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இலங்கைப் படையினர் பயணித்த வாகனத்தின் மீதே, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Post a Comment