நாளைக்கே உயர் நீதிமன்றில், மேன் முறையீடு செய்கிறார் மஹிந்த
மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக நாளை உயர் நீதிமன்றில் மேன் முறையீடு செய்யவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தாக்கல் செய்த நீதிப் பேரணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடையுத்தரவை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷ உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந் நிலையிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றின் தடையுத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளார்.

அந்த ராஜபக்ஸ குடும்ப அங்கத்தவர்களின் கொள்ளை,களவு, கொலை பற்றிய கோப்புகள் இன்னும் கிடைக்கவில்லை.அவை கையில் கிடைத்தால் அல்லது அவைகள் அனைத்தும் தீயில் கொளுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டால் பதவியை ராஜினாமா பண்ணவோ அல்லது விட்டுக் கொடுக்கவோ முடியும். அதுவரையில் ஒன்றும் செய்யமுடியாது.அப்பீல் பண்ணி எடுக்கும் காலகட்டத்திலாவது அவற்றை மீளப் பெற அல்லது தீயிலிட்டுக் கொளுத்தமுடிந்தால் அத்துடன் இந்த பிரதமர் பதவியைத் தூக்கி வீசலாம். என்ன செய்ய. பொறுத்திருந்து வேலை செய் வோம்.
ReplyDelete