Header Ads



ரணில் மீது தனிப்பட்ட உறவோ, அக்கறையோ எமக்கு இல்லை - ரிசாத்

தமது கட்சியை பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்கவை பிரசித்தப்படுத்தும் நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

காங்கிரஷின் தலைவர் ரிசாத் பதியுதீன் கொழும்பில் செய்தியாளர்களை இன்று சந்தித்தபோதே இதனை குறிப்பிட்டார்.

தமது கட்சியை பொறுத்தவரை, ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரிக்கிறது.

ரணில் விக்கிரமசிங்கவுடன் தனிப்பட்ட உறவோ அக்கறையோ தமது கட்சிக்கு இல்லை. எனினும் சட்டவிரோதமாக அகற்றப்பட்ட ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்பதை தமது கட்சி வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக, முஸ்லிம் தலைவர்கள் பணம்-பதவிகளுக்காக புதிய அரசாங்கத்திற்கு Jump பண்ணவில்ல என்பது அதிசயம் தான், ஆனால் உண்மை.

    ஆணால், ஒரே ஒரு தடவை செய்த செயலுக்காக இப்படி statement விடுவது கொஞ்சம் ஓவர் சார்.

    ReplyDelete

Powered by Blogger.