சில அரசியல்வாதிகள், நான் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை
குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள், தான் கட்சி அரசியலுக்கு வருவதற்கு விருப்பமில்லாததன் காரணமாக அரசியலுக்கு வரவிருந்த தீர்மானத்தை மாற்றிக்கொண்டுள்ளேன் என ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் தொடர்ந்தும் ஊழல், மோசடி தொடர்பான விடயங்களை அம்பலப்படுத்தி நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் பிரிதிநிதிகளுக்கு மேலாக நாட்டிற்கு சேவை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்போவதாகவும் அதன் முதலாவது கட்டமாக எதிர்வரும் 5ஆம் திகதி அம்பாறை மஹஓய நகரில் கூட்டம் இடம்பெறவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment