Header Ads



"குற்றத்தையும் ஒப்புக்கொண்டு, மஹிந்தவையும் காட்டிக் கொடுத்த ஜனாதிபதி"

மஹிந்தவின் அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிக்க அமைச்சர்களுக்கு கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டது, விலையை அதிகரித்தமையே மஹிந்தவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது போனது என்பதை கூறியதன் மூலம்  தான் குற்றவாளி என்பதை ஜனாதிபதி ஒப்புக்கொண்டதுடன் மஹிந்தவையும் காட்டிக் கொடுத்துவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜத ஹேரத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், 

19 ஆம் திருத்தத்துக்கு அமைய ஜனாதிபதியினால்  நான்கரை ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியாது. ஆனால் கடந்த வாரம் ஜனாதிபதி கூறியது என்ன? ஒரு வாரத்தில் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக கூறினார். ஆனால் இன்று அந்த வாரம் முடிகின்றது. இப்போது நீதிமன்ற தீர்ப்பு வரையில் காத்திருக்க வேண்டும் என கூறுகின்றார். ஏன் இவர் நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி பேசுகின்றார். ஒரு கருத்தில் அவர் உறுதியாக இருப்பதில்லை என்பதை சகல சந்தர்ப்பத்திலும் அவர் நிரூபித்து  விட்டார்.  

அதேபோல் இன்று சபாநாயகர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். அனால் சபாநாயகர் மீது எந்த தவறும் இல்லை. நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடப்பட் வேண்டும் என்பது ஜனாதிபதியின் தீர்மானம். மாறாக சபாநாயகர் தீர்மானம் அல்ல. பொய்யான காரணிகளை கூறி இவர்கள் அனைவரும் நாட்டினை நாசமாக்கி வருகின்றனர். அன்று நீதிமன்றத்தை நாடுங்கள் என சவால் விருத்தவர்கள் இன்று நீதிமன்ற தீர்ப்பையே ஏற்றுகொள்ள மாறுகின்றனர் என்றார். 

1 comment:

Powered by Blogger.