Header Ads



மைத்திரிபால வேடிக்கை பார்க்காது, ரணிலை மீண்டும் பிரதமராக்குமாறு சஜித் கோரிக்கை

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் அதிக நம்பிக்கை காணப்படுவதனால் அவரையே பிரதமராக நியமிக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சஜத்  பிரேமதாச தெரிவித்தார்.

ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்கும் வகையில் அமைந்த, நம்பிக்கைப் பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரை நிகழ்த்தும் போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு வீழ்ச்சியை நோக்கி பயணிக்கிறது. அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடையும் வழங்கப்படாதுள்ளது. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென இவற்றை வேடிக்கை பார்க்காது, ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட நிலையை  நாட்டில் மீண்டும்  ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

1 comment:

  1. சஜித் அவர்களே, நீங்கள் பிரதமர் பதவியை ஜனாதிபதியிடம் வாங்கிவிட்டு அதை ரணிலுக்கு கொடுங்கள்.

    மானசீக நோய்க்கு அது தான் மருந்து.

    ReplyDelete

Powered by Blogger.