Header Ads



ரவியை உடனடியாக, கைதுசெய்யுமாறு முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக விசாரணை நடத்தி உடனடியாக அவரை கைது செய்யுமாறு சத்திய கவேசகயோ அமைப்பினர் நேற்று காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அபிவிருத்திக்காக, தம்பர அமில தேரருக்கு இரகசிய கணக்கின் ஊடாக நிதி வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திடம் இருந்து தம்பர அமில தேரருக்கு மாதாந்தம் 95 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தமை, நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற விசாரணையில் அண்மையில் வெளிப்பட்டிருந்தது.


1 comment:

  1. Immediately Arrest this thief RAVI Please..
    Give this shameful culprit permanent break from politics.
    We don't need any more thief for FUTURE Politics.

    ReplyDelete

Powered by Blogger.