Header Ads



ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, லேக் ஹவுஸுக்கு முன்னால் அமைதியற்ற முறையில் சிலர் செயற்பட்டமைக்கு, ஐக்கிய தேசியக் கட்சி, தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், ​ஐ.தே.கவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இடப்பட்டுள்ள பதிவிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, சம்பவத்துக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.