Header Ads



மஹிந்த என்னை 6 அடி மண்ணில், புதைப்பாரென தேர்தல் பிரச்சாரத்திற்காகவே கூறினேன் - ஜனாதிபதி மைத்திரிபால

தேர்தல் பிரச்சார நோக்கத்திற்காகவே தாம், தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீது குற்றம் சுமத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச 2015 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியிருந்தால் தாமும் தமது குடும்பமும் ஆறடி மண்ணில் புதையுண்டிருக்க வேண்டுமேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேர்தல் பிரச்சார மேடைகளில் கூறி வந்தார்.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று ஜனாதிபதியிடம் வினவியுள்ளது.

இதன் போது, தேர்தல் பிரச்சார நோக்கத்திற்காக மஹிந்த தம்மை கொலை செய்வார் என கூறியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தரப்பினர் தம்மை கொலை செய்ய முயற்சித்தனர் என்பது தொடர்பில் எவ்வித அறிக்கைகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

5 comments:

  1. ahhaahaha we are foolish hmmm
    you are correct sir

    ReplyDelete
  2. மனநோய் அறிகுறிகள் மிகவும் மோசமாகிக் கொண்டே போகிறது. அதன் வௌிப்பாடுகள் இந்த நாட்டு மக்களையும் பாதிக்கமுன்பு இந்த நாட்டு மக்களைக் காப்பாற்ற ஏதும் வழியிருக்கின்றதா? தயவுசெய்து இந்த நாட்டு மக்களை காப்பாற்ற அல்லது மனநோயாளியிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வழிகாட்ட யாராவது இருக்கின்றார்களா?

    ReplyDelete
  3. IT means he can say anything in future and will interpret in different way too.

    SO His Speech can not be TRUSTED any more....

    ReplyDelete
  4. நாடு தற்போது நாடக மேடையாகிவிட்டது

    ReplyDelete
  5. In democracy it is regular incidents no need to worry

    ReplyDelete

Powered by Blogger.