Header Ads



18 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு, செல்லவுள்ள மகிந்த அணி

எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு புறக்கணித்து வந்தது.

நாடாளுமன்ற அமர்வு சட்டவிரோதமாக நடத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தி வந்தனர்.

எனினும் எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் தாங்களும் கலந்து கொள்ளவிருப்பதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.