வதந்திகளுக்கு முஸ்லிம்கள் ஏமாறாது மஹிந்தவுக்கும், மைத்திரிக்கும் ஆதரவளிக்க வேண்டும்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணிக்கே ஆதரவு வழங்க வேண்டும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு எதிரானவர் என பரப்பப்படும் வதந்திகளுக்கு ஏமாந்து விடக்கூடாது என முன்னாள் பிரதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
'பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களை இன்று சிலர் ஞாபகமூட்டி வருகிறார்கள். அவை ஏதோ சூழ்ச்சிகளினால் இடம்பெற்றவை. இதற்காக முஸ்லிம் சமூகத்திடம் அவர் கவலை தெரிவித்துள்ளார்'. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் முஸ்லிம் சமூகம் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது. அன்றைய ஜனாதிபதிமீதிருந்த பீதியே ஆட்சி மாற்றத்திற்குக் காரணமாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் இடம்பெற்றன. இவற்றை ஜனாதிபதி முடிவுக்குக் கொண்டு வந்தார். சிறுபான்மை மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாகவே கடமையாற்றுவார்.
தற்போதைய அமைச்சரவையிலும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அரசியல் தீர்வுக்கான அரசியலமைப்பில் திருத்தங்கள் காலதாமதமாகியுள்ளன. பல்சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் உடனடியாக தீர்மானங்களை எடுக்க முடியாது. அதில் காலதாமதம் நிச்சயமாக ஏற்படும்.
கடந்த ஆட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கு பிராந்தியங்களுக்கே அதிகமான விஜயங்களை மேற்கொண்டு அப்பகுதி மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து தீர்வுகள் பெற்றுக்கொடுத்துள்ளார். எனவே தமிழ், முஸ்லிம் சமூகம் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டணிக்கு தமது ஒருமித்த ஆதரவினை வழங்கவேண்டும்.
இன்று முஸ்லிம் சமூகம் தமது அரசியல் தலைமைத்துவங்களின் மீது நம்பிக்கையிழந்து விட்டது. அதனாலேயே பெரும்பான்மையானோர் பெரும்பான்மைக் கட்சிகளை ஆதரிக்கின்றனர். முஸ்லிம் சமூகம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீது இன்று கூடுதல் நம்பிக்கை வைத்துள்ளது. அவர்களது ஆதரவு பெருகிவருகிறது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்பு தொடர்ந்தும் இருக்கிறது.
ஜனநாயகத்தைப் பாதுகாத்து ஜனநாயக ரீதியில் ஓர் அரசாங்கத்தை அமைத்துக் கொள்வதற்காகவே ஜனாதிபதி அவருக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தின்படி பாராளுமன்றத்தைக் கலைத்தார். இது தொடர்பிலான தீர்வினை உயர் நீதிமன்றம் வழங்கும் என்றார்.
-Vidivelli
you must be joking. MS and MR are now gone. They made a political suicides. what a joker are you?
ReplyDelete2016 முன் தாங்கள் பூமியில் வாழ்ந்தீரா அல்லது வேற்று கிரகத்தில் வாழ்ந்தீரா? நீங்களும் பைசர் முஸ்தபா ஹிஸ்புல்லா 3 பேரும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமா
ReplyDeleteWat the hell r u talking....
ReplyDeletewhat is ur qulification???
ReplyDeleteCadermasthan are you in Masthu... I mean did you take drugs... Shame on you culprit...
ReplyDeleteமறந்தே விட்டோம். நல்லநேரம் முஸ்லிகளின் கண்களை திறந்துவிட்டீர்கள். ஒருவர் ஏமாற்றுக்காரன் மற்றவர் நம்பிக்கை துரோகி.
ReplyDeleteWho is this guy????
ReplyDelete