பாராளுமன்ற நிகழ்வு ஆரம்பமானது - யாருமே பிரதமர் இல்லை என்கிறார் சபாநாயகர்
நாடாளுமன்றம் இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியுள்ள நிலையில், கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில், யாரும் பிரதமராக நியமிக்கப்படாததால், பிரதமர் என்ற வகையில், நாடாளுமன்றத்தில் யாரும் அமர முடியாது என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதற்கு தினேஸ் குணவர்த்தன எதிர்ப்புத் தெரிவித்தார். சிறிலங்கா அதிபரின் முடிவையும் தெரிவித்தார். அதற்கு சபாநாயகர், தான் சிறிலங்கா அதிபருக்கு பதில் அனுப்புவேன் என்றார்.
(முற்பகல் 10.10 மணி)

Post a Comment